Saturday, August 10, 2013

• லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

• லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

லண்டன் மாநகரில் “மானாட மயிலாட”வை வெற்றிகரமாக நடத்தி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பெருமைப்படும் முதலாளி அல்லி ராஜாவுக்கு பட்டினியால் வாழ வழியின்றி கிணற்றில் வீசி கொல்லப்பட்ட இந்த குழந்தைகளின் போட்டோவை சமர்ப்பிக்கிறேன். இதைப் பார்த்தாவது அவர் உணர்வு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தாயகத்தில் போராட்டம் நடந்த போது அதைக் காட்டி புலத்தில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர்கள் இன்று அதே தாயகத்தில் மக்கள் கஸ்டப்படும்போது அதை மறந்து புலத்தில் வீண் ஆடம்பர கேளிக்கைகள் செய்வது அவசியம்தானா எனக் கேட்க தோன்றுகிறது.

வன்னியில் பிறந்த லைக்கா மொபைல் முதலாளி இன்று அதே வன்னியில் பட்டினியால் மக்கள் தற்கொலை செய்யும் போது லண்டனில் “மானாட மயிலாட” நடத்துவது தேவைதானா? வன்னியில் உணவின்றி குழந்தைகள் சாகும்போது அதையிட்டு கவலை கொள்ளாது தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு பிரதம விருந்தினராக நடிகர் சிம்புவை அழைக்க வேண்டுமா?

வன்னியில் முன்னாள் பெண் பொராளிகள சிலர் உணவுக்காக தமது கற்பையே விற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது குறித்து கவலை கொள்ளாது “மானாட மயிலாட” மேடையில் நடிகைகளின் புகழ்ச்சியைப் பெறுவது தேவைதானா? ஆல்லது அவ்வாறு புகழ்ச்சி பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?

லண்டனில் மிகப் பெரிய வெம்பிளி அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலைஞரின் “மானா மயிலாட” நடந்துள்ளது. இதற்கான அனைத்து செலவையும் ஏற்று உதவியவர் இந்த முதலாளி அல்லிராஜா என்று மேடையேறிய அனைத்து நடிகர் நடிகையரும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து இலங்கைத் தமிழரான அல்லி ராஜா அவர்கள் பெருமைப்படலாம். ஆனால் அவரது இந்த செயல் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் வெட்கி தலை குனிய வைத்துள்ளது.

கீழே கிணற்றில் பசியால் இறந்துள்ள வன்னி குழந்தைகளை பார்த்தாவது தயவு செய்து உணர்வு பெறுங்கள்.

No comments:

Post a Comment