Thursday, August 29, 2013

அமெரிக்காவில் நிறவேற்றுமை ஒழிந்து கறுப்பர்கள் விடுதலை பெறுவது எப்போது

• உலகிற்கு ஜனநாயகத்தை போதிப்பதாக கூறும் அமெரிக்கா தனது நாட்டில் கறுப்பர்களுக்கு எப்போது ஜனநாயகத்தை வழங்கப் போகிறது?

• அமெரிக்காவில் நிறவேற்றுமை ஒழிந்து கறுப்பர்கள் விடுதலை பெறுவது எப்போது?

• கறுப்பரான ஒபாமா ஜனதிபதியாக இருக்கும் அமெரிக்காவில் இன்னமும் கறுப்பர் அச்சத்துடனே வாழ்கின்றனர்!

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் பலர் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக 18 மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரேவொன் மார்ட்டின் என்ற இளைஞனின் தாய் கூறுகிறார்.

அமெரிக்க சிவில் உரிமை செயற்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் நடத்திய நகர ஊர்வலத்தின் 50வது ஆண்டு நிறைவாக இன்று சனிக்கிழமை வாஷிங்டன் நகரில் நடக்கவுள்ள பேரணியிலும் சப்ரினா ஃபுல்டோன் உரையாற்றுகிறார்.

17 வயதான இளைஞன் ட்ரேவொன் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்ட ஜோர்ஜ் சிம்மர்மன் கடந்த மாதம் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment