Saturday, August 10, 2013

• மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த குழந்தையின் போட்டோ சமர்ப்பணம்

• ஒரு இறந்த தாயிடமிருந்து பால் குடிக்க முயலும் ஒரு குழந்தையின் படத்தை பிரசுரித்து பதிவு ஒன்று போட்டிருந்தேன். அந்த படம் இலங்கையில் எடுக்கப்படவில்லை, மியான்மரில் எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டதால் தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அந்தபதிவையும் நீக்கியிருந்தேன். ஆனால் பல நண்பரகள்; அந்த பதிவு எழுப்பும் கேள்வி நியாயமானது என்றும் அதனை மீண்டும் பதிவு செய்யும்படி கேட்கிறார்கள். எனவே அவர்களுக்காக மீண்டும் அதனை பதிவு செய்கிறேன்.

• மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த குழந்தையின் போட்டோ சமர்ப்பணம்

மாகாணசபைத் தேர்தல் நடக்கலாம். பாராளுமன்ற தேர்தல் நடக்கலாம். ஏன் ஜனாதிபதி தேர்த்தல் கூட நடக்கலாம். ஓவ்வொரு தேர்தலிலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவதாக வாக்குறுதிகள் தரலாம்.

கலைஞர் அறிக்கை விடுவார். ஜெயா அம்மையார் கடிதம் எழுதுவார். மலையாளி தூதுவர் டில்லியில் இருந்து வந்து ராஜபக்சவுடன் விருந்துண்ணி செல்வார். உடனே “இந்தியா மிரட்டியுள்ளது” என்று அறிக்கைவிட்டு சம்பந்தன் மகிழ்வார்.

பூமி சுழருகிறதோ இல்லையோ ஆனால் பல வருடங்களாக இந்த சுழற்சியே இலங்கை தமிழர்களுக்கு நடந்து வருகிறது. எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.

இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இந்த குழந்தை செய்த பாவம் என்ன? இதன் தாய் தமிழ் மொழி பேசியதைத் தவிர வேறு என்ன பாவம் செய்தது?

உலகில் இதைவிடக் கொடுமை உண்டா? இந்த கொடுமைக்கு என்னதான் தீர்வு? ஓ நியாயன்மாரே உரத்து கேட்கிறோம,; உங்கள் காது என்ன செவிடா? நாங்கள் கேட்பது ஏன் உங்கள் காதில் விழுவதில்லை? நாங்கள் என்ன கேட்க யாரும் இல்லாப் பரதேசிகளா?

மாகாணசபை வேட்பாளர்களே!

தேர்தலில் போட்டியிட உங்களுக்கு ஆயிரம் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்த குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு ஒரு நியாயம் கூறுங்கள்!

No comments:

Post a Comment