Monday, June 16, 2014

கலைஞர் 91வது பிறந்த நாள். மன்னிக்கவும். வாழ்த்த மனம் வரவில்லை!

• கலைஞர் 91வது பிறந்த நாள்.
மன்னிக்கவும். வாழ்த்த மனம் வரவில்லை!

100 வயது முதிர்ந்த ஒரு நபர் இறந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாமே என்று நினைப்பது பொதுவான மனிதப் பண்பு. ஆனால் ஒரு நபர் வாழும்போதே அவருக்கு இன்னும் சாவு வரவில்லையா என தமிழ் மக்கள் நினைப்பார்களேயானால் அந்த நபர் கலைஞர் ஒருவராகவே இருக்க முடியும்.

'உலக தமிழ் இனத் தலைவர்' என தன்னைத்தானே அழைத்துக்கொண்டு தன் குடும்ப நலனுக்காக தமிழ் இன அழிவுக்கு துணை போனவர் கலைஞர். முள்ளிவாய்க்கால் அழிவுகள் தமிழ் மக்கள் மனங்களில் இருக்கும்வரை கலைஞர் ஒரு தமிழ் இனத் துரோகியாகவே வரலாறு பதிவு செய்யும்.

தேர்தலில் படுகேவலமான தோல்வியை பெற்ற பின்பும்கூட தானோ அல்லது தன் குடும்பத்தவர்களோ தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என்று கலைஞர் கூறவில்லை. மாறாக தொண்டர்களே தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என்று கூறுகிறார். தனது குடும்பத்தவர்கள் பதவி பெற வேண்டும் என்பதற்காக விகிதாசார தேர்தல் முறை வேண்டும் என்கிறார்.
இது அவர் இனியும் திருந்துவதற்கு தயார் இல்லை என்பதையே காட்டுகிறது.

வெறும் மஞ்சள் பையுடன் சென்னை வந்த கலைஞர் குடும்பம் இன்று பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சொத்து சேர்த்தது எப்படி? என்று கேட்டால் 'ஜெயா அம்மையார் சொத்து குறித்து கேட்கமாட்டீர்களா' என பதில் தருகிறார்.
என்னே திமிர்தனமான பொறுப்பற்ற பதில் இது?

கலைஞர் தன் பக்கத்தில் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு திரிகிறார். இது சட்டவிரோதமாச்சே, எப்படி? என்று கேட்டால், 'ஒன்று மனைவி இன்னொன்று துணைவி' என வார்த்தைஜாலம் புரிகிறார். அதுமட்டுமா! அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே தைரியமாக 'ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு' என்று மேடையில் விளாசுகிறார். தமிழன் என்ன அந்தளவு மாங்காய் மடையன் என்று நினைக்கிறாரா?

கலைஞர் தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக 1990ம் ஆண்டு சிறப்பு முகாம்களை திறந்து அகதிகளை பிடித்து அடைத்தவர். அதன் பின் மூன்று முறை ஆட்சியில் இருந்துவிட்டார். ஆனால் அந்த சிறப்புமுகாம்களை மூடுவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை.

அதுமட்டுமல்ல இன்றும்கூட அந்த கொடிய சித்திரவதை முகாம்கள் மூடப்பட வேண்டும் என்று அறிக்கை விடக்கூட அவர் தயார் இல்லை. ஆனால் 'டெசோ' மூலம் தமிழீழம் பெற்று தருவதாக அறிக்கைவிட்டு ஏமாற்றுகிறார். அவருடைய அறிக்கையை தி.மு.க தொண்டன்கூட இனி நம்பமாட்டான். அப்படியிருக்க ஈழத் தமிழன் நம்புவானா?

பல்லாயிரம் கோடி ரூபா ஊழல் செய்துவிட்டு அதற்காக நீதிமன்றத்தில் ஆஜாரகுமாறு அழைப்பு வந்தவுடன் ஒரு மனைவிக்கு மறதி நோய் வருகிறது. மகள் மருத்துமனை சென்று தங்குகிறார்.
என்னே கேவலமான குடும்பம் இது?

No comments:

Post a Comment