Monday, June 16, 2014

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

• ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை அரசுதமிழீழத்திற்கு சம்மதித்தாலும் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழம் மலர சம்மதிக்காது என்பதே உண்மை என்பதை இந்த சிலர் மறைக்கின்றனர்.

ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது. ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது. பின்னர் இலங்கை அரசு தனது பிடிக்குள் வந்துவிட்டதும் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியையே இந்திய அரசு மேற்கொண்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் விரும்பாவிடினும் இந்திய ராணுவத்துடன் மோதுவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்திய உளவுப்படை புளட் இயக்கத்திற்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கட்டளையிட்டிருந்தது. அதன்படி சங்கிலியன் தலைமையிலான புளட் இயக்கத்தினர் மன்னார் பிரதேசத்தில் ஒரே நாளில் பல புலிகளைக் கொன்றனர்.

இந்திய உளவுப்படையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட புலிகள் வேறு வழியின்றி அழிவில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போர் புரிந்தனர். போர் அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதே உண்மை.

அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவம் ஆயிரக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல தமிழ் பெண்களை கற்பழித்தது. கோடிக் கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தைவிட இலங்கை ராணுவம் மேல் என தமிழ் மக்கள் நினக்கும் அளவிற்கு இந்திய ராணுவம் அழிவுகளை மேற்கொண்டது.

இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு யாரும் நீதி வழங்கவில்லை? இந்தியாவில் எதாவது ஒரு நீதிமன்றத்தில் நியாயம் வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை நிகழந்;திருக்காது. ராஜீவ் காந்தியினால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுக்காதவர்கள் ராஜீவ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?

புலிகள் அமைப்பு இந்திய ராணுவத்துடன் போர் புரிந்த வேளை பாகிஸ்தான் உளவு அமைப்பு தேவையான உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் பிரபாகரன் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உதவியை பெற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல இந்தியாவுக்குள் போராடிக் கொண்டிருக்கும் சில அமைப்புகள் கூட தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரிய போது புலிகள் அதற்கு அதற்கு மறுத்துவிட்டனர்.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயற்பட விரும்பாத புலிகள் அமைப்பபை இந்தியாவே அழிபதற்கு பெரிதும் உதவியது என்பதை இனியாவது இந்திய அரசை இன்னமும் நம்புவோர் புரிந்து கொள்வார்களா?

No comments:

Post a Comment