Monday, June 16, 2014

தொடரும் இனவாத தாக்குதல்கள்! இதற்கு முடிவு கட்டுவது எப்படி?

தொடரும் இனவாத தாக்குதல்கள்!
இதற்கு முடிவு கட்டுவது எப்படி?

3 அப்பாவிகள் பலி!
6 பேர் கவலைக்கிடம்!!
150 க்கு மேற்பட்டோர் காயம்!!!
பல கோடி ருபா சொத்துகள் சேதம்!!!

இவர்கள் பயங்கரவாதிகளா?
இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்களா?
இவர்கள் தனிநாடு கேட்டார்களா?

ஜனாதிபதி அவர்களே!

இந்த முஸ்லிம் மக்கள் செய்த தவறு என்ன?
இவர்கள் முஸ்லிம்களாக பிறந்தது தவறா?
இலங்கை தமது நாடு என்று நம்பியது தவறா?

முதலில் முஸ்லிம்;களை 'வந்தேறு குடிகள்' என்றீர்கள்
பின்னர் 'அல்கைதா' வந்து விட்டது என்றீர்கள்
இறுதியாக 'தலிபான்' ஊடுருவிட்டது என்றீர்கள்
தகுந்த நாளை தெரிவு செய்து ஊடரங்கு பிறப்பித்தீர்கள்.
உங்கள் குண்டர்களை ஏவி விட்டு அப்பாவிகளை தாக்கினீர்கள்

கடந்த தேர்தலுக்கு 40 ஆயிரம் தமிழர்களை அழித்தீர்கள்.
அடுத்த தேர்தலுக்கு முஸ்லிம்களை அழிக்கிறீர்கள்.
உங்கள் பதவி வெறிக்கு இனவாதத்தை பயன்படுத்துகிறீர்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
தமிழ் சிங்கள் முஸ்லிம் உழைக்கும் மக்கள் உண்மையை உணர்வார்கள்.
தங்கள் ஒற்றுமையின் மூலம் அவர்கள் உங்களை தூக்கியெறிவார்கள்.
இது உறுதி!

No comments:

Post a Comment