Monday, June 16, 2014

இலக்கிய சந்திப்பு

• இலக்கிய சந்திப்பு

42வது இலக்கிய சந்திப்பு ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது. அடுத்த 43வது இலக்கிய சந்திப்பு சுவிசில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இலக்கிய சந்திப்புகளை நடாத்தும் இலக்கியவாதிகளின் ஆர்வம் நிச்சயம் பாராட்டக்குரியது.

தொடர்ந்து வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இலக்கிய சந்திப்புகள் முதல் முறையாக கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த 41வது இலக்கிய சந்திப்பை முன்னிட்டு 'குவார்னிகா' என்ற கனமான தொகுப்பை வெளியிட்டிருந்தனர். இதைவிட இதுவரை நடந்த இலக்கிய சந்திப்புகளில் வேறு ஏதும் பதிவுகள் வெளியிடப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.

லண்டனில் நடைபெற்ற இரண்டு இலக்கிய சந்திப்புகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இன்னமும் இந்த இலக்கிய சந்திப்புகள் என் நடாத்தப்படுகின்றன? இதன் அவசியம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

'ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்' என்றார் மாபெரும் ஆசான் மாவோ அவர்கள். அந்தளவில் புலிகள் இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் உரையாடும் களமாக இலக்கிய சந்திப்புகள் இருந்தன. ஆனால் தற்போது புலிகள் அற்ற நிலையில் இந்த இலக்கிய சந்திப்புகளின் அரசியல் என்ன? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

• இலக்கியம் என்றால் என்ன? அதற்கு வருடா வருடம் சந்திப்பு அவசியமா?
• 'இலக்கிய சந்திப்பு' இன் அரசியல் என்ன?
• அந்த அரசியல் அடைவதற்கான வேலைத் திட்டம் என்ன?

மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக இலக்கிய சந்திப்பு குழுவினர் அடுத்த சுவிஸ் சந்திப்புக்கு முன்னர் தெளிவு படுத்துவார்கள் என நம்புகிறோம்.

பல இலக்கிய ஆர்வலர்கள் பல்லாயிரக் கணக்கான ரூபாய்க்களை செலவு செய்து நடத்தும் இந்த இலக்கிய சந்திப்புகள் எதிர்கால சந்ததிக்கு பயன் உள்ள வகையில் அமைய வேண்டும் என விரும்புகிறோம்.

எமது விருப்பம் நிறைவேறுமா?

No comments:

Post a Comment