Monday, June 16, 2014

பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயா அம்மையார் சந்திப்பு

• பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயா அம்மையார் சந்திப்பு

• மீனவர் பிரச்சனை தீர கச்சதீவை மீட்குமாறு கோரிக்கை

• தமிழர் பிரச்சனை தீர பொது வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை தீருமா?
பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு கோருமா?
இவையெல்லாம் சாத்தியமா? அல்லது
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வியூகமா?

இதெல்லாம் இருக்கட்டும், முதலில்
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்புமுகாமை மூட
ஜெயா அம்மையார் மறுப்பது ஏன்?
அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய
ஜெயா அம்மையார் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டில் கொடிய சிறப்புமுகாம்கள் இருக்கும்வரை
அடைத்து வைத்திருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படும்வரை
முதலமைச்சர் ஜெயா அம்மையாருக்கு மட்டுமல்ல
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாருக்குமே
மகிந்தராஜபக்சேவை பார்த்து கேள்வி கேட்க
எந்த தகுதியும் இல்லை!

No comments:

Post a Comment