Monday, June 16, 2014

தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் • வல்லரசுக் கனவில் இருப்பவர்கள் பதில் தருவார்களா?

• தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
• வல்லரசுக் கனவில் இருப்பவர்கள் பதில் தருவார்களா?

செய்தி- இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

சில கேள்விகள்:-

(1)டில்லியில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது பொங்கியெழுந்தவர்கள் தற்போது மௌனம் காப்பது ஏன்? பாதிக்கப்ட்டவர்கள் தலித் பெண்கள் என்பதாலா?

(2)காங்கிரஸ் மன்மோகனசிங் ஆண்டாலும், பி.ஜே.பி மோடி ஆண்டாலும் பெண்கள் மீதான கொடுமை தொடர்கிறதே. இதை தடுத்து நிறுத்த முடியாதா?

(3)இந்தியா வல்லரசாகிறது என சிலர் கனவு காண்கிறார்களே. அவர்கள் இந்த கொடுமைகளுக்கு பதில் தருவார்களா?

கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த பெண்கள்
எமது மொழி பேசாதவர்களாக இருக்கலாம்
எமது இனம் இல்லாமலும் இருக்கலாம்
ஆனால் அவர்களும் மனிதர்கள்தானே.
அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருந்தால்
'மனிதம்' செத்துவிட்டது என்று அர்த்தமாகும்.

No comments:

Post a Comment