Monday, June 16, 2014

• தமிழக மக்களிடம் பட்ட கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

• தமிழக மக்களிடம் பட்ட கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

ஈழத் தமிழர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு 'தமிழீழம்' என பெயர் சூட்டியதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தன் மகளுக்கு 'தமிழீழம்' என பெரியார் தொண்டன் சாக்கிரட்டீஸ் பெயர் சூட்டியிருப்பதை அறிகிறேன்.

ஈழத் தமிழர்கள் யாரும் தங்கள் வியாபார நிலையங்களுக்கு 'பிரபாகரன்' பெயர் சூட்டியிருப்பதை நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பல உணர்வாளர்கள் 'பிரபாகரன்' பெயரை சூட்டுவதை நான் அறிகிறேன்.

ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கூட புலிப்படம் கொண்ட ஆடைகளை அணிய தயங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் சிறுவர்கள் கூட புலிப்படம் கொண்ட சட்டைகளை மகிழ்வுடன் அணிகின்றனர்.

• முள்ளிவாயக்காலில் மாபெரும் அழிவு நடந்தபோது கூட எந்தவொரு ஈழத் தமிழனும் தீக்குளித்து இறக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து இறந்தார்கள்.

• லண்டன் மாநகரில் உள்ள தமிழர்கள் 'மானாட மயிலாட' பார்த்து ரசிக்கும்போது தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக வீதியில் இறங்கி போராடினார்கள்.

• கனடாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே கோயிலில் குத்தாட்டம் போட்டபோது தமிழ்நாட்டில் பல மக்கள் யுத்த விசாரணை கோரி போராட்டங்களை நடத்தினார்கள்.

இவையெல்லாம் சரி என்றோ அல்லது இப்படியெல்லாம் செய்வதால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்றோ நான் இங்கு கூற வரவில்லை. மாறாக இந்த தமிழ் நாட்டு மக்களின் அர்ப்பணிப்பு உண்மையானது. எந்தவித சுயநலமும் அற்றது. நாம் அவர்களுக்கு மிகப்பெரிய கடன் பட்டிருக்கிறோம்.

தமிழக அரசியல் தலைவர்கள் எமக்கு துரோகம் இழைத்திருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் எமக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என்று இலக்கியம் கூறுகிறது. அது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் அந்த ராவணன் போல் இப்போது நாம் தலை குனிந்து நிற்கின்றோம். தமிழக மக்களிடம் பட்ட இந்த கடனை எப்படி திருப்பி செலுத்தப்போகிறோம்?

இதோ இந்த இணைப்பில் தனக்கு 'தமிழீழம்' என பெயர் சூட்டிய தந்தைக்கு தமிழக சிறுமி ஒருவர் எப்படி அஞ்சலி செலுத்துகிறார் என்பதைப் பாருங்கள்.

https://www.facebook.com/photo.php?v=707897239267409&fref=nf
சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு நினைவேந்தல் நிகழ்ச்சி படத்திறப்பு 30.05.2014 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.இதில் பெரியார் சாக்ரடீசு மகள் தமிழீழம் ஆற்றிய உருக்கமான உரை.

No comments:

Post a Comment