Monday, June 16, 2014

'புரட்சிப்புயல்' வைகோ எப்போது ஆயுதம் ஏந்துவார்?

'புரட்சிப்புயல்' வைகோ எப்போது ஆயுதம் ஏந்துவார்?

இதோ 'புரட்சிப் புயல்' வைகோ அவர்களின் உணர்ச்சிப் பேச்சு. நீங்களும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள். ஈழத் தமிழனுக்காக தானே முதல் ஆளாக ஆயுதம் ஏந்துவேன் என்கிறார்.

முள்ளிவாய்க்காலில் இத்தனை அழிவுகள் நடந்த பின்பும் அவர் ஏன் இன்னும் ஆயுதம் ஏந்தவில்லை? இன்னும் எத்தனை தமிழன் அழிந்த பின்பு அவர் ஆயுதம் ஏந்துவார்?

பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தயாராக இருக்கின்றனர். வைகோ அவர்கள் தான் ஆயுதம் ஏந்தாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை ஆதரிக்காவது முன்வருவாரா?

பல வருடங்களுக்கு முன்னரே இந்திய அரசின் சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு ஆயுதம் ஏந்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் தோழர் தமிழரசன். அவர் பெயரைக்கூட இதுவரை வைகோ உச்சரித்தது இல்லை. இனியாவது தோழர் தமிழரசனை வைகோ அவர்கள் ஆதரிப்பாரா?

http://www.youtube.com/watch?v=Vyf5WnCt1_M

No comments:

Post a Comment