Monday, June 16, 2014

மோடி பதவியேற்பில் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு!

• மோடி பதவியேற்பில் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு!

மன்னர் காலத்தில் மாமன்னர்களின் பட்டாபிசேகத்தில் குறுநில மன்னர்கள் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதுபோல்

இன்றைய முதலாளித்துவ காலத்தில் பேட்டை ரவுடி இந்திய மோடி யின் முடிசூட்டுவிழாவில் தாதா ராஜபக்சே கலந்துகொண்டு தன் விசுவாசத்தைக் காட்டவேண்டிய நிலை.

மோடி வென்றதும் படையை அனுப்பி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என யாராவது நம்பியிருந்தால் அவர்களுக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வது நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவியாகவே செயற்பட்டது என்பதை அறிந்தவர்களுக்கு மோடியின் ராஜபக்சே வரவேற்பு நிலை ஆச்சரியமானது அல்ல.

இங்கு எனது கேள்வி என்னவெனில் தேர்தலில் தனக்கு 6 சீட்டு கேட்டு வாங்கிய வைகோ , தமிழீழம் குறித்து அல்லது ராஜபக்சே குறித்து பி.ஜே.பி யின் நிலை என்னவென்று ஒரு வார்த்தை கேட்கவில்லையா?

மோடி 3 முறை தமிழகம் வந்தார். ஆனால் ஒரு முறை கூட அவர் தமிழீழம் குறித்து ஒரு வார்த்தை கூறவில்லையே. அது குறித்து வைகோ சிறிதும் கவலை கொள்ளவில்லையே?

பி.ஜே.பி க்கு எதிராக காங்கிரசை ஆதரிப்பதும் காங்கிரசை ஒழிக்க பி.ஜே.பி யை ஆதரிப்பதும் என மாறி மாறி இந்திய அரசை காப்பாற்றி வருகிறார் வைகோ

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்திய அரசு எமக்கு தேவையில்லை என வைகோ கூறுவாரா?

அந்த இந்திய அரசின் கீழ் தமிழக மக்கள் இருக்க விரும்பமாட்டார்கள் என வைகோ கூறுவாரா?

இந்திய அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை புறக்கணித்தால் தமிழ்நாடு தனி நாடாகும் என்று வைகோ அறிவிப்பாரா?

அல்லது தனது தொண்டர்களின் உணர்வுகளை காயடித்து இந்திய அரசுக்கு சேவகம் செய்வாரா?

No comments:

Post a Comment