Friday, August 31, 2018

சம்பந்தர் அய்யா மெண்டலா?

•சம்பந்தர் அய்யா மெண்டலா? அல்லது
மக்களை மெண்டலாக்க பார்க்கிறாரா?
யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவன் “ டாக்டர்! ஒருத்தருக்கு மெண்டல் குணமாயிடுச்சு என்று எப்படி கண்டு பிடிப்பது?" என்று கேட்டான்.
அதற்கு டாக்டர் “சின்ன சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
“கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா டாக்டர்?” என்று மாணவன் கேட்டான்.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வைச்சிட்டு அதன் அருகில் ஒரு சின்ன ஸ்பூன், ஒரு மக்( குவளை) வைச்சிடுவோம். போய் அந்த பக்கெட்டில உள்ள தண்ணியை காலி பண்ணு என்று மனநோயாளியிடம் கூறுவோம்” என்றார் டாக்டர்
“ஓ! புரியுது. குணமாகாத ஆளாக இருந்தால் ஸ்பூனில தண்ணியை எடுத்து வெளில ஊத்திக்கிட்டு இருப்பான். அப்படிதானே டாக்டர்?” என்றான் மாணவன்.
அதற்கு டாக்டர் “எக்ஸாட்லி! இதுவே உன்கிட்ட சொல்லியிருந்தா நீ என்ன பண்ணியிருப்பே?” என்று கேட்டார்.
உடனே அந்த மாணவன் “ நானாய் இருந்தால் குவளையால் தண்ணியை மள மளவென்று அள்ளி ஊத்தியிருப்பேன்” என்றான்.
டாக்டர் சிரித்துக்கொண்டு சொன்னார் “ இந்த மாதிரி கேஸ்களை நாங்க செமி என்று சொல்வோம்”
இதைக் கேட்டு திகைத்த மாணவன்” என்னது டாக்டர்? நான் செமி மெண்டலா? அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?” என்று கேட்டான்.
“பக்கெட்டை எடுத்து கவுத்திட்டு போயிட்டே இருப்பான்” என்றார் டாக்டர்.
இதை அவதானித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் எழும்பி “ டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்
டாக்டர் “ என்ன சந்தேகம் தாராளமாய் கேள்” என்றார்
“ஒரு வயதானவர் அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தீர்வு வரவில்லை. அவர் முழு மெண்டலா? அல்லது செமி மெண்டலா?” என்று அந்த மாணவன் கேட்டான்.
அதற்கு அந்த டாக்டர் “அவர் மெண்டல் இல்லை. நல்ல தெளிவாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மக்களை மெண்டலாக்கப் பார்க்கிறார்” என்றார்.
(யாவும் கற்பனை அல்ல)
குறிப்பு- யாழ் மருத்துவ பீட மாணவர்களும் பேராசிரியரும் மன்னிக்க வேண்டும்.

No comments:

Post a Comment