Thursday, October 9, 2014

• சீ! வெட்கம்?

• சீ! வெட்கம்?
ஜெயா அம்மையார்,
சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை
மொழிப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை
ஈழப் போராட்டத்தை ஆதரித்து சிறை செல்லவில்லை.
மக்களின் பணத்தை கொள்ளையடித்தமைக்காக
குற்றவாளியாக சிறை சென்றுள்ளார்.
18 வருடம் வாய்தா வாங்கி இழுத்தடித்தவர்
இறுதி நேரத்தில்கூட புலிகளால் ஆபத்து என்றவர்
தண்டனை வழங்கியவுடன்
தனக்கு சுகர் வருத்தம் என்றார்
கால் மூட்டு வலி என்றார்
நெஞ்சுவலி வேறு என்றார்
சிறை என்றவுடன் இந்த அரசியல்வாதிகள் எல்லோருக்கும்
எப்படி இத்தனை வருத்தம் திடீரென்று வந்துவிடுகிறது?
சிறையில் ஜெயா அம்மையாருக்கு
வெளி உணவு அனுமதி.
குளிருட்டி மற்றும் மின்விசிறி வசதி
மெத்தை கட்டில் வசதி
தொலைபேசி வசதி
தொலைக்காட்சி வசதி
தண்டனை உடை இல்லை
தண்டனை வேலை இல்லை
இது போதாது என்று சசியையும்
தன்னுடன் ஒன்றாக இருக்க அனுமதிக்கும்படி
அடம் பிடிக்கிறார்.
இவருக்காக வெளியில் சிலர்
தெய்வத்திற்கு தண்டனையா? என்கின்றனர்
சாகும்வரை உண்ணாவிரதம் என்கின்றனர்
என்ன கேவலம் இது?
சீ! வெட்கம்!

No comments:

Post a Comment