Friday, October 31, 2014

வீரப்பன் கொலையும் ஜெயா அம்மையாரின் ஜாமீன் விடுதலையும்!

 வீரப்பன் கொலையும்
ஜெயா அம்மையாரின் ஜாமீன் விடுதலையும்!
வீரப்பன்,
சந்தன கட்டை கடத்தியபோது கொல்லப்படவில்லை.
யானை தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை.
வன அதிகாரிகளை கொன்றபோதும் கொல்லப்படவில்லை
பொலிசாரைக் கொன்றபோதும் கொல்லப்படவில்லை- ஆனால்
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோது அவர்
உடனடியாக கொல்லப்பட்டார்!
இதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது
இந்திய அரசு!
ஊழல் செய்தால் கண்டு கொள்ளாது!
கொலை, கொள்ளை செய்தால் கூட அக்கறை கொள்ளாது!
ஆனால் தமிழர் விடுதலை பற்றி பேசினால்
ஒருபோதும் அவர்களை விட்டுவைக்காது!
தமிழ்நாடு விடுதலை குறித்து பேசியதாலே
நயவஞ்சகமாக வீரப்பன் கொல்லப்பட்டார்
தோழர் தமிழரசன் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழ்நாடு விடுதலைக்கு ஆதரவளித்தமையினாலே
தோழர் நெப்போலியன் மலையகத்ல் கொல்லப்பட்டார்.
• கொள்ளைக்காரன் என்றழைக்கப்பட்ட வீரப்பன் வைத்த கோரிக்கைகள்!
(1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும்
(2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்
(3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
(4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும்
(5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
• புரட்சி தலைவி என்றழைக்கப்படும் ஜெயா அம்மையார் வைத்த கோரிக்கைகள!
(1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும்
(2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும்
(3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்
இப்போது புரிகிறதா?
ஏன் ஜெயா அம்மையாருக்கு ஜாமீன் விடுதலை வழங்கப்பட்டது?
ஏன் வீரப்பன் கொலை செய்யப்பட்டார் என்று?

No comments:

Post a Comment