Thursday, October 9, 2014

• சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் ஜெயா அம்மையாருக்கு மட்டும் விதிவிலக்கு!

• சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால்
ஜெயா அம்மையாருக்கு மட்டும் விதிவிலக்கு!
பேரறிவாளனுக்கு கண் சிகிச்சை அளிக்க மறுப்பு- ஆனால்
ஜெயா அம்மையாருக்கு 4 தனியார் மருத்துவமனை தயார் நிலையில்
நளினி தனது கணவன் முருகனை சந்திக்க கூட தடை விதிப்பு- ஆனால்
ஜெயா அம்மையார் சசியை தன்னுடன் கூட இருக்க அனுமதி கோரி மனு
நளினி கைத் தொலைபேசி வைத்திருந்ததாக வழக்கு. ஆனால்
ஜெயா அம்மையாருக்கு விசேட தொலை பேசி இணைப்பு
சிறையில் கைதிகளுக்கு களி சோறு - ஆனால்
ஜெயா அம்மையாருக்கு அடையாறு அனந்தபவன் உணவு
சிறையில் சதாரண கைதிக்கு படுக்க கட்டாந்தரை
ஜெயா அம்மையாருக்கு படுக்க மெத்தை கட்டில்
வைக்கப்பட்டிருப்பது சிறையில் உள்ள எஸ்.பி பங்களாவில்
அதில் மின் விசிறி மற்றும் குளிருட்டி வசதி
எல்லா சனல்களும் கொண்ட தொலைக்காட்சி
மூன்று வேளையும் வெளியில் இருந்து உணவு
எந்நேரமும் தயார் நிலையில் மருத்துவ குழு
இது சிறையா அல்லது பெங்களுர் ஓட்டலா?
ஜெயா அம்மையார் அனுபவிப்பது தண்டனையா?
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த
ஜெயா அம்மையாருக்கு ஏன் இந்த சலுகை?
• நம்புவோம்!
இந்தியா ஜனநாயக நாடு என்றும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும்.

No comments:

Post a Comment