Friday, October 31, 2014

• "வெட்டப்படுவது ஆடுகளைத்தான். சிங்கங்களை அல்ல".- டாக்டர் அம்பேத்கார்

• "வெட்டப்படுவது ஆடுகளைத்தான். சிங்கங்களை அல்ல".- டாக்டர் அம்பேத்கார்
சட்டம், சிறை, தண்டனை எல்லாம் ஏழை மக்களுக்கேயொழிய
அரசியல்வாதிகளுக்கோ, பணம் படைத்தவர்களுக்கோ அல்ல.
அகதியாய் வந்தவர்களை எந்த குற்றச்சாட்டும் இன்றி
பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்துள்ளது ஜெயா அரசு.
சிறப்புமுகாம் உள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு
புரட்சிபுயல் வைகோ கோரினார்
அய்யா நெடுமாறன் கோரினார்
மருத்துவர் ராமதாஸ் கோரினார்
திருமாவளவன் கோரினார்.
“நாம் தமிழா”; சீமான் கோரினார்.
ஆனால் ஜெயா அம்மையார் இன்றுவரை
அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்.
மக்கள் பணத்தை சுருட்டிய குற்றத்திற்காக ஜெயா அம்மையார் அடைக்கப்ட்டிருக்கிறார்.
ஆனால் அகதிகள் எந்த குற்றமும் இன்றி அடைக்கப்பட்டிருக்கிறார்களே?
சிறையில் ஜெயா அம்மையாருக்கு அனைத்து வசதிகளும் உண்டு.
ஆனால் சிறப்புமுகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லையே?
இனியாவது ஜெயா அம்மையார் உணர்வாரா?
சிறப்புமுகாமில் உள்ள அகதிகள் விடுதலை பெற வழி செய்வாரா?

No comments:

Post a Comment