Friday, October 31, 2014

காஸ்மீரில் இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

• காஸ்மீரில் இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக
லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.10.2014) இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
• கடந்த 20 வருடங்களில் 8000 காஸ்மீர் மக்களை காணவில்லை.
• 70000பேர் போலி மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
• 15000மனுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுக்குகூட நீதி வழங்கப்படவில்லை.
இந்திய ராணுவம் காஸ்மீரில்
(1) யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்!
(2) யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்!
(3) மாணவர்களைக்கூட பயங்கரவாதிகள் என்று கைது செய்யலாம்!
(4) யாரையும் நீதி விசாரணை இன்றி பல வருடம் சிறையில் அடைக்கலாம்.
இந்த அவல நிலைக்கு எதிராகவே லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த அக்கிரமங்களை ஜ.நா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் எந்தளவு மோசமானது என்பதை நாம் ஈழத்தில் கண்டுள்ளோம்.
இந்திய ராணுவம் இன்று காஸ்மீரில் மட்டுமல்ல மணிப்பூர், நாகலாந்து, அசாம் போன்ற மாநிலங்களிலும் இதே கொடுமையையே செய்து வருகின்றனது.
“பச்சை வேட்டை” என்னும் பெயரில் மாவோசிஸ்டுகளை ஓடுக்குவதாக அப்பாவி மலைவாழ் மக்களை கொன்று குவிக்கிறது.
இந்திய ராணுவத்தின் இந்த கொடுமைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அதன் மூலமே விடுதலை பெற முடியும்.

No comments:

Post a Comment