Friday, October 31, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
ஆங்கிலேயர்கள்,
• ரயில் பாதை அமைத்தார்கள்
• தார் வீதி அமைத்தார்கள்
• துறைமுகம், விமான நிலையம் அமைத்தார்கள்
• தேயிலை,ரப்பர் தோட்டம் அமைத்தார்கள்
• ஆங்கிலத்தில் கல்வி தந்தார்கள்
• கிருத்தவ மதம் பரப்பினார்கள்
இத்தனை அபிவிருத்திகளை ஆங்கிலேயர்கள் செய்தும்
இலங்கை மக்கள் ஏன் சுதந்திரத்தை விரும்பினார்கள்?
20 ஆயிரம் பேருக்கு காணி வழங்கியதாக கூறும் நீங்கள்
ராணுவம் அபகரித்த நிலங்களை மக்களுக்கு எப்போது வழங்குவீர்கள்?
பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டிருப்பதாக கூறும் நீங்கள்
ராணுவ கற்பழிப்புகளில் இருந்து தமிழ் பெண்களை எப்போது பாதுகாப்பீர்கள்?
தமிழ் மக்களுக்கு வசந்தத்தைக் கொடுப்பதாக கூறும் நீங்கள்
பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோருக்கு நிம்மதி கொடுப்பீர்களா?
மக்களுக்காக யாழ்தேவி ரயில் விட்டிருப்பதாக கூறும் நீங்கள்
குடாநாட்டு மக்களின் குடிதண்ணீர் எப்போது கொடுப்பீர்கள்?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறீர்கள். ஆனால் காரைநகரில் கற்பழித்த கடற்படை வீரரை நீதிமன்றில் அஜர் செய்ய மறுப்பது ஏன்?
உங்கள் தம்பி கோத்தபாயா இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கிறார்.
ஆனால் தமிழ் மக்ககளுக்கு இரட்டைக் குடியுரிமையை மறுப்பது ஏன்?
தமிழீழம் தவிர அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்குவேன் என்றீர்கள் யுத்தம் முடிந்து 5 வருடமாகியும் எதனையும் வழங்காதது ஏன்?
அபிவிருத்தி என்ற பெயரில் தேர்தலுக்காக நீங்கள் வழங்கும்
அற்ப சலுகைகளுக்கு வாலாட்டுவதற்கு
தமிழ் மக்கள் ஒன்றும் நாய்க் குட்டிகள் அல்லர்.

No comments:

Post a Comment