Thursday, October 9, 2014

இதுதான் துக்ளக் "சோ" வின் பார்ப்பணீய நியாயம்!

• ஜெயா அம்மையாருக்கு ஒரு நியாயம்
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் துக்ளக் "சோ" வின் பார்ப்பணீய நியாயம்!
ஜெயா அம்மையாருக்கு வழங்கப்பட்ட தண்டனையால் அவருக்கு இழப்பில்லையாம். மாறாக தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாம் என்று சோ அய்யர் கூறுகிறார்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறு என்று அவருடைய வாக்குமூலத்தை திருத்தி எழுதிய பொலிஸ் அதிகாரி மட்டுமல்ல முழு தமிழகமே கூறியது. அப்போது நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்றும் கூறியவர் சோ அய்யர். ஆனால் அவர் இன்று ஜெயா அம்மையாருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
சங்கர ராமனை கொன்ற காஞ்சி சங்கராச்சாரியை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய சோ அய்யர் அவர்கள் இன்று ஜெயா அம்மையாருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுக்கிறார்.
ஜெயா அம்மையாரின் சாராய கம்பனி சொத்துக்களின் நிர்வாகியாக செயற்பட்டவர் இந்த அய்யர் சோ என்று எழுத்தாளர் ஞானி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார். முறைப்படி இந்த சொத்து குவிப்பு வழக்கில் சோ அய்யர் அவர்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் சேர்க்கப்படாதது மட்டுமல்ல விசாரணைக்குகூட அவர் அழைக்கப்படவில்லை.
ஊழல் அரசியல்வாதிகள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும் என்று இதுவரை யோக்கியனாக எழுதிவந்த சோ அய்யர் அவர்கள் இன்று தனது பங்காளி ஜெயா அம்மையாருக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் அது தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் என கூறுகிறார்.
இதுதான் பார்ப்பணீய பாசம் என்பதா அல்லது வர்க்க பாசம் என்பதா?

No comments:

Post a Comment