Thursday, October 9, 2014

தன் மகன் எங்கே? எனக் கேட்ட தாயிடம் ஆடு வேண்டுமா? எனக் கேட்ட இலங்கை அரசு!

• தன் மகன் எங்கே? எனக் கேட்ட தாயிடம்
ஆடு வேண்டுமா? எனக் கேட்ட இலங்கை அரசு!
வடக்கில் வசந்தம் இதுதானா?
கிழக்கில் உதயம் இதுதானா?
மகிந்த சிந்தனை இதுதானா?
யுத்தம் முடிந்து 5 வருடமாகிறது. பிள்ளைகளை தேடும் தாய்மார்களுக்கு தகுந்த பதில் அளிக்காமல் காலம் கடத்துகிறது இலங்கை அரசு.
என்ன கொடுமையிது?
சீ! வெட்கம்!
“கண்ணகி மதுரையை எரித்தது போல் உங்களையும் தெய்வம் நிச்சயம் எரிக்கும்” என அந்த தாய் இயலாமையில் சாபம் இட்டார்.
தெய்வம் இருக்கிறதோ? இல்லையோ? அந்த
தெய்வம் எரிக்கிறதோ ?இல்லையோ? ஆனால்
ஏழைகளை கொடுமைப்படுத்தும் எந்த அரசும்
நிலைத்ததாக சரித்திரம் இல்லை.
ஈராக்கில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்றார்கள் என்று
அமெரிக்கா, பிரான்ஸ் எல்லா நாடுகளும் குண்டுகள் போடுகின்றன.
ஆனால் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை
இலங்கை அரசு கொன்றபோது ஏன் இந்த நாடுகள் தடுக்கவில்லை?
ஈராக்கிற்கு ஒரு நியாயம்.
மகிந்தவிற்கு இன்னொரு நியாயம்.
இதுதான் அமெரிக்க நியாயமோ?
பல்லாயிரம் அப்பாவி மக்களை கொன்ற மகிந்தவிற்கு
இந்திய பிரதமர் செங்கம்பள வரவேற்பு அளிக்கிறார்.
ஜ.நா சபையோ பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறது.
ஆனால் நம்மவர்கள் இன்னமும்
இந்தியா வரும் , ஜ.நா வரும்
தமிழர்களைக் காப்பாற்றும் என
கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொடுமையை யாரிடம் சொல்வது?

No comments:

Post a Comment