Monday, May 30, 2022

திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்த அகதிகளை பலவந்தமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பொலிசாரை அனுப்பிய திராவிட அரசினால் ஏன் அவ் அகதிகளின் கோரிக்கைக்கு பதில் அளிக்க ஒரு அதிகாரியை அனுப்ப முடியவில்லை? சிங்களவர்கள் மீது இரக்கம் காட்டி உணவு அனுப்புங்கள் என்று தமிழக முதல்வரிடம் கேட்ட சுமந்திரன், தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர்கூட தருவதில்லை என்றுகூறி உண்ணாவிரதம் இருக்கும் ஈழஅகதிகள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று ஏன் கேட்க முடியவில்லை? ஈழத் தமிழர்கள் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு இரக்கம் காட்டும் என்று கூறும் காசிஆனந்தன் ஐயா, இந்தியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இந்த ஈழ அகதிகள் இந்துதானே, இவர்கள் மீது ஏன் இந்திய அரசு இரக்கம் காட்டவில்லை என்பதற்கு பதில் தருவாரா?

No comments:

Post a Comment