Monday, May 30, 2022

சீதையை ராவணன் சிறை வைத்த இடத்தை

சீதையை ராவணன் சிறை வைத்த இடத்தை பார்வையிட காட்டிய அக்கறையை ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலையோ அல்லது இரண்டு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையோ பார்வையிட அண்ணாமலை அக்கறை காட்டாதது ஏன்? இவர்கள் ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது? தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது ஈழத்திற்கு வந்தார். இப்போது அண்ணாமலை வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழர்களாக இருந்தும்கூட ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ஆனால் இந்துத் தமிழீழம் கேட்டால் பாஜக அரசு உதவும் என்று காசி ஆனந்தன் ஐயா எப்படி நம்புகிறார்?

No comments:

Post a Comment