Monday, May 30, 2022

ஊரும் நடந்தது உறவும் நடந்தது

ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல் பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப் போவது தெரியாமல் கூடி மகிழ்ந்திட்ட கோயில் கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன பாடி குதூகலித்த வீட்டு முற்றத்தில் பாவியாய் வந்;து புகுந்தது சிங்கள ராணுவம் “பாதுகாப்பு வலயம்”என்பதை நம்பி முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனரே ஆனால் அதுதான் தாம் புதைக்கப்படும் வலயம் என்பதை அறியாமலே நடந்தனரே வந்த பேய்கள் கொளுத்திய தீயில் வெந்து செத்தவர் எத்தனையோ?

No comments:

Post a Comment