Monday, May 30, 2022

இனப்படுகொலை நாளை தமிழ் மக்கள் நினைவு

இனப்படுகொலை நாளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் வேளையில் பேரறிவாளன் விடுதலை என்ற செய்தி ஆறுதல் தருகிறது. மற்ற ஆறு தமிழர்களையும் தாமதமின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்பட்டமைக்கு தமிழக ஆளுநரும் மோடி அரசுமே காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க அண்ணாமலையை அழைத்து வந்து விளக்கு ஏற்றுபவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பேரறிவாளன் தலைக்கு மேலே தூக்கு கயிறு தொங்கிய வேளையிலும் ஈழத் தமிழரை ஆதரித்தது தவறு என்று கூறவில்லை. மாறாக இனியும் ஆதரிப்போம் என்றே தாயார் அற்புதம்மாள் கூறினார். அவர் மக்களை நம்பினார். மக்கள் அவர் விரும்பிய மகனின் விடுதலையை பெற உறுதியான ஆதரவை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment