Monday, May 30, 2022

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன் ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன் குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே. நான் செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர! என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால் பிரபாகரன் பயங்கரவாதி எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி என்கிறார்கள். சரி. அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது அவர் மகனை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை.? மாறாக அவர்களை பாதுகாத்து படிக்கவும் வைத்துள்ளார்களே. ஏனெனில் அவர் சிங்களவர். நான் தமிழன். அதுதானே காரணம். அவர்கள் என்னைக் கொன்றபோதுகூட வலிக்கவில்லை ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம்தான் என்று சுமந்திரன் அங்கிள் சொல்லும்போதுதான் வலிக்கிறது. பிளீஸ், சுமந்திரன் அங்கிள்! நீங்கள் எனக்காக நியாயம் கேட்காவிட்டாலும் பரவாயில்லை நடந்தது இனப் படுகொலை அல்ல என்று மட்டும் கூறாதீர்கள்.

No comments:

Post a Comment