Tuesday, November 18, 2014

ஒரு பெண்மணியின் 14 வருட உண்ணாவிரத போராட்டம்!

• ஒரு பெண்மணியின் 14 வருட உண்ணாவிரத போராட்டம்!
நவம்பர்-5 , 14 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் மணிப்பூர் பெண் இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள்.
மணிப்பூரில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் விசேட கறுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இரோம் சர்மிளா மட்டுமல்ல மணிப்பூரில் பல பெண்கள் இதே கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றனர். சில பெண்கள் நிர்வாண போராட்டம்கூட நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களது நியாயமான கோரிக்கையை அன்னை சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்ற வில்லை.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும்கூட அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
மாறாக அனைத்து அரசுகளும் இரோம் சர்மிளாவை சிறையிலே அடைத்து கொடுமைப்படுத்துகிறது.
இரோம்சார்மிளாவின் தொடரும் 14 வருட உண்ணாவிரதம்
• அகிம்சை போராட்டத்தின் மூலம் தீர்வு பெற முடியாது என்பதையும்
• ஆயுதப் போராட்டத்தின் மூலமே தீர்வு பெற முடியும் என்பதையும்
நன்கு உணர்த்துகிறது.
தமிழ் மக்கள் தமது ஆதரவை இரோம் சர்மிளாவுக்கு வழங்க வேண்டும்!
தமிழ் மக்கள் மணிப்பூர் மக்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்!
“சிறுபான்மை இனங்களின் சிறைக்கூடமே இந்தியா” –தோழர் தமிழரசன்.

No comments:

Post a Comment