Tuesday, November 18, 2014

மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது இந்திய நீதிமன்றங்களிலேயே!

மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது
இந்திய நீதிமன்றங்களிலேயே!
செய்தி- “60 வயது மாதவிடாய் நின்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது பலாத்காரம் இல்லை”. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
இந்திய நீதிமன்றங்களில் குப்பை நீதிபதிகள் பெருகிவிட்டனர்.
பிரதமர் மோடி முதலில் குப்பை பெருக்க வேண்டியது
இந்திய நீதிமன்றங்களிலேயே!
மகிந்த ராஜபச்சவின் இலங்கை நீதிமன்றத்தில்கூட
இப்படியான முட்டாள் தீர்ப்பு கூறப்பட்டதில்லை.
ஆனால் ஜனநாயக நாடு என்றும்
சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்றும் கூறப்படும்
இந்தியாவிலேயே இத்தகைய முட்டாள் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகைய நீதிபதிகள் இருந்தால்
60 வயது பெண்ணை மட்டுமல்ல
6 வயது சிறுமியைக்கூட காடையர்கள்
இனி தைரியமாக பாலியல் வல்லுறவு செய்வார்களே!
ஏழைகள் தமக்கு நீதி வேண்டி நீதிமன்றம் செல்வார்கள்.
அந்த நீதிமன்றமே இப்படி நீதி வழங்கினால்
அவர்கள் இனி எங்கு செல்ல முடியும்?
இந்தியாவில் பெண்களை
அவர்கள் நம்பும் ஆண்டவனால்கூட
இனி காப்பாற்றமுடியுமா என்பது சந்தேகமே?

No comments:

Post a Comment