Sunday, November 30, 2014

ஜ.நா மன்றமே! பிரபாகரன் மரணம் போர்க்குற்றம் இல்லையா?

• ஜ.நா மன்றமே!
பிரபாகரன் மரணம் போர்க்குற்றம் இல்லையா?
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னரே
இலங்கை அரசு பிரபாகரனை கொன்றதாக அறிவித்தது.
அப்படியாயின்,
ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னர்,
ஆயுதங்கள் அற்ற நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டது
ஒரு போர்க்குற்றம் அல்லவா?
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை
போர்குற்றமாக கருதும் ஜ.நா மன்றம்
பிரபாகரன் கொலையை கண்டுகொள்ளாதது ஏன்?
பிரபாகரன் கொல்லப்பட்டதும் போர்க்குற்றமே. இந்த போர்க்குற்றத்தில் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது பலரும் அறிந்ததே!
எனவே “பிரபாகரன் இருக்கிறார்” என்பது இலங்கை, இந்திய அரசின் போர்குற்றங்களை மறைக்கவே பெரிதும் உதவுகிறது.
வைகோ, நெடுமாறன் ஆகியோர் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என்று கூறுவதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கு எதிராக தமிழக மக்கள் போராடுவதை தடுக்கிறார்கள்.
இதன் மூலம் இந்திய அரசுக்கு பெரிதும் உதவுகிறார்கள். இதை தமிழ் மக்கள் முதலில் உணரவேண்டும்.
“பிரபாகரன் இருக்கிறார்” என்பது
இலங்கை இந்திய அரசுக்கே பெரிதும் உதவுகிறது

No comments:

Post a Comment