Tuesday, November 18, 2014

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
ஈழ அகதிகளை மட்டும் அடைத்து வைப்பது ஏன்?
சிறப்பு அகதி முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கடந்த 15.11.14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்ய மட்டுமல்ல அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்த அகதிகள் செய்த குற்றம் என்ன?
• இவர்கள் மக்களின் 66கோடி பணத்தை சுருட்டியவர்களா?
• இவர்கள் நீதிமன்றத்தால் 4 வருடம் தண்டனை விதிக்கப்பட்டவர்களா?
• இவர்கள் தாய் தமிழகத்தை நம்பி வந்தது குற்றமா?
தமிழக அரசே!
கடந்த காலங்களில் செய்தது போன்று அதிகாரிகள் மூலம் வாக்குறுதி அளித்து ஏமாற்றாமல் இம்முறையாவது அவர்களை உடனே விடுதலை செய்!
சிறப்புமுகாம் என்னும் பெயரில் உள்ள சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமை உடனே மூடு!
எவ்வித நீதி விசாரணையும் இன்றி சந்தேகத்தின் பெயரில் பல வருடங்களாக அகதிகளை அடைத்து வைக்கும் கொடுமையை உடனே நிறுத்து!
சில சந்தேகங்கள்,
• கத்தி படத்திற்கு எதிராக திரண்ட 140 தமிழ் உணர்வு அமைப்புகள் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?
• மகிந்த ராஜபக்சவின் சிறைக் கொடுமையை கண்டிப்பவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளின் இந்த சிறைக்கொடுமையை கண்டிப்பார்களா?
• மக்களின் பணத்தை சுருட்டி தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்கள் இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?

No comments:

Post a Comment