Sunday, November 30, 2014

பிரபாகரனுக்கு ஒரு நியாயம் விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் (இனவாத) நியாயமா?

பிரபாகரனுக்கு ஒரு நியாயம்
விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் (இனவாத) நியாயமா?
இலங்கை அரசானது “பயங்கரவாதிகள்” என்ற முத்திரை குத்தி
1989ல் 60 ஆயிரம் சிங்கள மக்களை அழித்தது. கூடவே ஜே.வி.பி தலைவர் ரோகண விஜயவீரவையும் கொன்றது.
2009ல் 40 ஆயிரம் தமிழ் மக்களை அழித்தது. கூடவே புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்றது.
ஆனால்,
பிரபாகரனின் குடும்பத்தை அழித்த இலங்கை அரசு விஜயவீராவின் குடும்பத்தை அழிக்கவில்லை.
பிரபாகரனின் பிள்ளைகளை கொன்ற இலங்கை அரசு விஜயவீராவின் பிள்ளைகளை பாதுகாப்புடன் படிக்க வைத்தது.
அதுமட்டுமன்றி,
விஜயவீராவுக்கு நினைவு சின்னம் வைக்க அனுமதித்த இலங்கை அரசு பிரபாகரனுக்கு நினைவு சின்னம் வைக்க அனுமதிப்பதில்லை.
ஆண்டுதோறும் விஜயவீராவுக்கு நினைவு தினம் அனுட்டிக்க அனுமதிக்கும் இலங்கை அரசு பிரபாகரனுக்கு நினைவு தினம் அனுட்டிக்க விடுவதில்லை.
இன்று விஜயவீராவின் ஜே.வி.பி கட்சி
மாகாண சபை உறுப்பினராகவும் இருக்கிறது
பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறது.
அமைச்சராக இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக
வெளிப்படையாக அறிவித்த பின்னரும்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்
இன்றும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
இவ்வாறு இனவாதத்தோடு செயற்படும் மகிந்த அரசு
இனப்பிரச்சனையை தீர்க்கும் என
இன்னமும் நம்புபவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment