Tuesday, November 18, 2014

இது என்ன நியாயம்?

இது என்ன நியாயம்?
இந்திய வரலாற்றில் 4 வருட தண்டனை பெற்ற எவரும் 21 நாட்களில் ஜாமீனில் விடுதலை பெற்றது கிடையாது. ஆனால் மக்களின் பணத்தை சுருட்டி தண்டனைக்குள்ளான ஜெயா அம்மையாருக்கு 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்து அந்த சாதனையை புரிந்துள்ளது.
அது ஏன் என்று கேட்டால் “ஜெயா அம்மையார் வயதானவராம். அவருக்கு பல நோய்கள் இருக்கிறதாம். எனவே ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்” என்கிறது உச்ச நீதிமன்றம்.
முன்பு சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறைவைக்கப்பட்டபோது 10 மாதம் கழித்தே உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ராஜீவ்காந்தி வழக்கில குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முனைந்தபோது இதே உச்ச நீதிமன்றமே தடுத்தது. அந்த மனு இன்னும் விசாரிக்கப்பட வில்லை.
ஆனால் மக்கள் பணத்தை சுருட்டி தண்டனைக்குள்ளான ஜெயா அம்மையாருக்கு மட்டும் உயர்நீதிமன்றம் ஜாமீனை மறுத்த நிலையிலும் உச்சநீதிமன்றம் 21 நாளில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.
ஜெயா அம்மையார் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. அவருடன் சேர்த்து அவருடைய தோழி சசிகலா மற்றும் வளர்ப்பு மகன் சுதாகரன் எல்லாம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் வயதானவர்களா? அவர்களும் நோயாளிகளா?
இவர்கள் 18 வருடம் வழக்கை இழுத்தடித்து நீதிமன்றத்தை அவமதித்தவர்கள். அதுமட்மல்ல சுதாகரன் மீது போதைபொருள் வழக்கு, மிரட்டல் வழக்கு என ஓரு “தாதா” வுக்குரிய அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்டு. குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவருக்கும் ஜாமீனில் விடுதலை வழங்கப்பட்டுள்ளதே?
இதோ இந்த படத்தில் உள்ள அகதியை பாருங்கள். இவரை ஜெயா அம்மையாரின் அரசு சிறப்புமுகாமில் வருடக்கணக்காக அடைத்து வைத்திருக்கிறது. இவரை விடுதலை செய்ய இந்தியாவின் எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை. இவர் எந்த குற்றமும் செய்யவில்லை. இவருக்கு எந்த தண்டனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. இவர் மீது எந்த வழக்கும்கூட இல்லை. இருப்பினும் இவரை விடுதலை செய்ய மறுப்பது என்ன நியாயம்?
“தாதா” சுதாகரனுக்கு ஒரு நியாயம்.
ஈழ அகதிக்கு இன்னொரு நியாயம்.
இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment