Tuesday, November 18, 2014

“இரும்பு பெண்” ஜெயா அம்மையாரும் ஈழத்தமிழர் ஆதரவு சுப்பு அக்காவும்

 “இரும்பு பெண்” ஜெயா அம்மையாரும்
ஈழத்தமிழர் ஆதரவு சுப்பு அக்காவும்
1993ல் டாக்டர் ராமதாஸ் மதுரையில் சிறைவைக்கப்பட்ட நேரத்தில் அவரது மனைவியார் ராமதாசின் உடல்நிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யுமாறு ஜெயா அம்மையாரிடம் கோரினார். அதற்கு “சிறையில் இருக்க அஞ்சுபவர்கள் எல்லாம் எதற்கு வீர வசனம் பேசவேண்டும? எதற்கு மனைவியை அனுப்பி கெஞ்ச வேண்டும்?” என்று ஜெயா அம்மையார் நக்கலாக பதில் அளித்தார்.
ஆனால் அதே ஜெயா அம்மையார் தனக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் “தனக்கு மூட்டு வலி சுகர் எல்லாம் இருக்கு. எனவே ஜாமீனில் விடுதலை செய்யங்கள்” என்று நீதிபதியிடம் கெஞ்சினார். “இரும்புபெண்” என தன்னைக் காட்டிக்கொண்ட ஜெயா அம்மையார் தனக்கு தண்டனை என்றதும் நீதிபதியிடம் கெஞ்சி உருகியதை நாடே பார்த்து சிரித்தது.
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் சுப்பு அக்காவும் அவரது கணவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். சுப்புஅக்கா ஈழத் தமிழர்கள் மீது அன்பும் ஆதரவும் கொண்டவர். அவர் சிறையில் அடைத்து வைக்கப்ட்டிருந்தபோதும் ஒரு ஈழத் தமிழரை சிறை அதிகாரிகள் தாக்கியதைக் கண்டித்து நடைபெற்ற சிறைவாசிகளின் உண்ணாவிரதத்தில் அவரும் பங்கெடுத்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் பங்குபற்றி நியாயம் கிடைக்க வழி செய்தார்.
சுப்பு அக்காவும் ஒரு பெண்தான். அவரும் வயதானவர் மட்டுமல்ல அமைச்சராகவும் இருந்தவர். இருப்பினும் அவருக்கு 10 மாதம் கழித்தே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் விடுதலை கிடைத்தது. ஆனால் சுப்பு அக்கா தண்டனை பெற்ற குற்றவாளி அல்ல. அவர் மீது வேறு எந்த வழக்கும் இருக்கவில்லை. இருப்பினும் 10 மாதம் கழித்தே ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், தண்டனை பெற்ற குற்வாளியான ஜெயா அம்மையாருக்கு மட்டும் 21 நாளில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.
வயதானவர். நோயாளி என்று காரணங்களை கூறி ஜெயா அம்மையாரை மட்டுமல்ல அவரது கும்பல்களான சசிகலா இளவரசி சுதாகரன் போன்றவர்களையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுதாகரன் மற்றும் இளவரசி போன்றவர்கள் வயதானவர்களா? அவர்களுக்கு என்ன நோய் உள்ளது? என்பதை உச்சநீதிமன்றம் மக்களுக்கு அறியத் தருமா?
சுப்பு அக்காவுக்கு ஒரு நியாயம்.
சுதாகரனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நியாயமா?

No comments:

Post a Comment