Tuesday, November 18, 2014

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழர் பண்பாட்டைக் கட்டிக்காப்பதில் விஞ்சி நிற்பது கலைஞர் கருணாநிதியா? யுவன் சங்கர் ராஜாவா?

• ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழர் பண்பாட்டைக்
கட்டிக்காப்பதில் விஞ்சி நிற்பது
கலைஞர் கருணாநிதியா?
யுவன் சங்கர் ராஜாவா?
மாபெரும் பட்டி மன்றம்.
சன் டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி (2015)
“தலைவர்” சாலமன் பாப்பையா- ஆண்டவன் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கலைஞரும் ஆண்டவர் தானே? ( பலத்த கைதட்டல்) எனவே அவரும் இரண்டு மனைவிகள் வைத்திருப்பதில் என்ன தப்பு? எண்பது வயதிலும் குஸ்பு வின் விலகலுக்காக அவர் பெரும் துயர் அடைந்தாரே. இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் இந்த “கெத்து” தமிழ் இனத்திற்கு பெருமைதானே!( பலத்த சிரிப்பு) எமக்கு இப்படி வாய்கவில்லையே என பொறாமைப்படலாமா? (மீண்டும் சிரிப்பு)
தனது பக்கத்தில் மனைவி, துணைவி என இரண்டு பேரை வைத்தக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு என்று பேசும் வல்லமை கலைஞரைவிட வேறு யாருக்கு இருக்கு?
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் இத்தனை பகிரங்கமாக பல மனைவிகளை வைத்திருக்கும் கலைஞரை சட்டம் இதுவரை தீண்ட முடியவில்லையே? சாதாரண தமிழன் இரு மனைவிகளை வைத்திருந்தால் உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் பொலிஸ், கலைஞரின் மனைவிகளுக்கு “சலூட்” அடிக்கிறதே!
என்னதான் 30 வயதிற்குள் 3 மனைவியரை யுவன் சங்கர் கட்டியிருந்தாலும் அவரால் ஒரே நேரத்தில் கலைஞர் போல் பல மனைவிகளை வைத்திருக்க முடியவில்லையே!
எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டை கட்டிக்காப்பதில் தமிழின தலைவர் கலைஞரை விஞ்ச யுவனால் மட்டுமல்ல உலகில் எந்தவொரு தமிழனாலும் முடியாது என்று தீர்ப்பு கூறுகிறேன். (பலத்த கைதட்டல்)
குறிப்பு- தி.மு.க தொண்டர்கள் தங்கள் தலைவர் கலைஞர் இந்த தள்ளாத வயதிலும் குஸ்புவுக்காக வருத்தப்பட்ட “கெத்திற்காக” பெருமையுடன் பேசிக் கொண்டனர்.
(யாவும் கற்பனை அல்ல)

No comments:

Post a Comment