Tuesday, November 18, 2014

ரஜனி அரசியலுக்கு வரவேண்டும் அவர் படுதோல்வி பெற வேண்டும்.

• ரஜனி பா.ஜ.க விற்கு வரவேண்டும் -பொன் ராதாகிருஸ்ணன்
• ரஜனி எங்களை ஆதரிக்க வேண்டும் - வாசன் கோஸ்டி
• ரஜனி எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்- இளங்கோவன் கோஸ்டி
இவர்கள் யாருமே தங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கோரவில்லையே?
அப்படியாயின் இவர்கள் மக்களுக்காக கட்சி நடத்தவில்லையா?
“தான் ஒருமுறை சொன்னா நூறுமுறை சொன்னமாதிரி” என்றார் ரஜனி.
திமுக வுக்கு ஓட்டுபோடுங்கள் என்று ரஜனி ஒருமுறை கூறியதை
நூறு தடவை சன் டிவி ஒளிபரப்பியும் தி.மு.க வெல்லவில்லையே?
அப்ப எதற்காக எல்லோரும் ரஜனியிடம் ஓடுகிறார்கள்?
பாஜக வினர்
கேட்டுப்பார்த்தார்கள்.
கெஞ்சிப் பார்த்தார்கள்.
தற்போது சிறந்த நடிகர் விருது கொடுத்து
வளைக்க நினைக்கிறார்கள்.
அப்போதாவது ரஜனி பாஜ.க வுக்கு ஆதரவு கொடுப்பாரா?
ரஜனி!
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.
எல்லா பணத்தையும் தமிழ்நாட்டுக்கு வெளியே முதலிட்டார்.
ஈழத் தமிழர் அழிக்கப்பட்டபோது மௌனம் காத்தார்.
தமிழ்நாட்டு தமிழனுக்காகவும்கூட குரல் கொடுப்பதில்லை.
அவரை எதற்கு எல்லா கட்சிகளும் கெஞ்சவேண்டும்?
“கூத்தாடிகளை கொண்டாடாதீர்கள். பெரியாரை கொண்டாடுங்கள்.
அப்பதான் தமிழகம் உருப்படும்” என நடிவேள் எம்ஆர்.ராதா கூறினார்.
அது ரஜனிக்கும் பொருந்தும்.
எமது விருப்பம் என்னவெனில்
ரஜனி அரசியலுக்கு வரவேண்டும்
அவர் படுதோல்வி பெற வேண்டும்.
அப்பதான் இந்த அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும்!

No comments:

Post a Comment