Tuesday, November 18, 2014

ஆயுதப் போராட்டம் பயனற்றதா?

• ஆயுதப் போராட்டம் பயனற்றதா?
• அகிம்சை வழியில் தீர்வு பெற முடியுமா?
ஆயுதப் போராட்டம் பயனற்றது என்றும் அகிம்சை வழியிலேயே தீர்வைப் பெறமுடியும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர் அல்லர்
ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவரும் அல்லர்.
அவர் அகிம்சைப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்.
தமிழ் மக்களுக்காக எந்த தியாகத்தையும் புரியாதவர்
சம்பந்தர் மூலம் பின் கதவால் பாராளமன்ற உறுப்பினர் ஆனவர்.
“ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று கூற
இவருக்கு என்ன தகுதி இருக்கு?
“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார் தோழர் மாசேதுங். ஆனால் அகிம்சை வழியில் அரசியல் அதிகாரம் பெறமுடியும் என்று போதிக்கிறார் சுமந்திரன்.
நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்கிறார் தோழர் மாசேதுங். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன பிச்சை எடுக்க வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்கிறார் என்கிறார் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்கிறார் தோழர் சண்முகதாசன். ஆனால் வன்முறை பயன் தராது. அகிம்சை வழி மூலமே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று சுமந்திரன் கூறுகிறார்.
அகிம்சை போராட்டம் நடத்திய தந்தை செல்வா அது தோல்வியுற்ற நிலையில் தமிழ் மக்களை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும் என்றார். ஆனால் பின் கதவால் பதவி பெற்ற சுமந்திரன் அகிம்சை வழியால் மகிந்தவிடம் தீர்வு பெற முடியும் என்கிறார்.
காரைநகரில் சிறுமியை கற்பழித்த கடற்படை வீரரை நீதிமன்றில் ஆஜர் செய்ய மகிந்த அரசு மறுக்கிறது. அதற்கே இந்த சட்ட வல்லுனரான சுமந்திரனால் எதுவும் செய்ய முடியவில.லை. ஆனால் 30 ஆயிரம் ராணுவம் சூழ்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவாராம்.

No comments:

Post a Comment