Sunday, November 30, 2014

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது

 “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.
அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது
(1)”புலிகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு கோத்தபாயாவுக்கு உதவுகிறது.
(2)”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி தேர்தலில் தொடர்ந்து வெல்வதற்கு மகிந்தராஜபக்சவுக்கு உதவுகிறது.
(3) “மீண்டும் புலிகளுடன் இணைந்துவிடுவார்கள்” என்று சொல்லி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்க மகிந்த அரசுக்கு உதவுகிறது.
(4)”புலிகளின் பிரதிநிதிகள்” என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க இலங்கை அரசுக்கு உதவுகிறது.
(5)இந்திய அரசு தொடர்ந்து புலிகள் இயக்கத்தைத் தடை செய்து வருவதற்கு உதவுகிறது.
(6)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்க தமிழக அரசுக்கு உதவுகிறது.
அதைவிட,
• தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது.
• தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது.
• பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது.
• புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது.
• சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக,
தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது.
இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது.
மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment