Sunday, November 30, 2014

சேனனின் “ இனத்துவேசத்தின் எழுச்சி “ நூல்

• சேனனின் “ இனத்துவேசத்தின் எழுச்சி “ நூல்
சேனன் எழுதிய “இனத்துவேசத்தின் எழுச்சி” நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. 112 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இந்தியாவில் விலை 90 ரூபா.
சேனன் இலங்கையில் பிறந்தவர். இலங்கையில் எந்த இயக்கத்திலும் செயற்படாதவர். இளம் வயதிலேயே நாட்டை விட்டு வெளியேறியவர். தற்போது லண்டனில் சோசலிசக் கட்சியில் முழுநேர செயற்பாட்டாளராக இருக்கிறார்.
2009 க்கு பிறகு தமிழகத்தில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நன்றாக விற்கின்றபடியால் சேனனின் ஈழம் பற்றிய எழுத்துக்களையும் புத்தகமாக்கியுள்ளனரோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
பல இணைய தளங்களில் சேனனால் எழுதி வெளியிடப்பட்ட 10 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. இவை தற்போதைய சூழ் நிலையில் எந்தளவு பொருத்தமாக இருக்கிறது அல்லது அவசியமாக இருக்கிறது என்று தெரியவில்லை.
ஏனெனில் ஒரு கட்டுரையில் புலிகளும் அரசும் யுத்தம் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என கோரப்படுகிறது. தற்போது புலிகள் அற்ற நிலையில் இந்த கோரிக்கை பொருத்த மற்றதாகவே தோன்றுகிறது.
சேனன் தன்னை ஒரு மாக்சியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்பவர். எனவே இலங்கை இனப் பிரச்சனையை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுக முற்படுகிறார்.
இலங்கையில் தேர்தல் ஒரு மோசடி நிறைந்தது என்கிறார். ஆனால் தேர்தல் பாதையை நிராகரிக்க தயங்குகிறார்.
அவர் ரொக்சியவாத எதிர்ப்புரட்சிகர நிலையில் இருந்து பார்ப்பதால் ஒரு சரியான புரட்சி தீர்வை முன்வைக்க முடியாதவராக இருக்கிறார்.

No comments:

Post a Comment