Monday, January 30, 2023

இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும்

• இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும் கடந்த வருடம் இதே காலப் பகுதியில் இந்த ஆறு வெங்காயங்களும் மன்னிக்கவும் தலைவர்களும் இந்திய தூதரின் பேச்சைக் கேட்டு தீர்வு 13 ஐ வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். அப்புறம் அதே இந்திய தூதர் கேட்டுக் கொண்டதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் ஊடக கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் தீர்வு 13க்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டனர். ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் இவர்களின் கடிதத்திற்கு இந்திய பிரதமர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து இவர்கள் இந்திய பிரதமர் மீதோ அல்லது தம்மை தூண்டி விட்ட இந்திய தூதர் மீதோ கோபம் கொள்ளவில்லை. மாறாக தமிழத்தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட்டனர். இனி இன்னொரு கூட்டமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். இந்திய தூதரின் பேச்சைக்கேட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு இவர்களுக்கு எதற்கு கூட்டமைப்பு?

No comments:

Post a Comment