Monday, January 30, 2023

வீரமணி - மேடம்! பெரியார் இல்லை

வீரமணி - மேடம்! பெரியார் இல்லை என்றால் உங்க அப்பா சேகுவாரா ஆஜென்டீனாவில் மருத்துவம் படித்திருக்க முடியாது. சே யின் மகள் - பெரியாரா? அதெப்படி? வீரமணி - பெரியார்தான் உலகின் மூத்தகுடி தமிழருக்கு கல்வி அறிவு தந்தவர் என்று இங்கே பல காலமாக கூறிவருகிறோம். அதை மக்களும் இத்தனை காலமாக நம்பி வருகிறார்கள். யாரும் அதெப்படி என்று திருப்பி கேட்டதில்லை. சே யின் மகள் - அப்ப சங்க இலக்கியம் படைத்த புலவர்கள் எல்லாம் படிக்காமலா படைத்தார்கள்? வீரமணி – அப்படியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. இங்கே இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதுமட்டுமல்ல கியூப மொழி காட்டுமிராண்டி மொழி என்று நீங்கள் கூறவேண்டும். சே யின் மகள் - யோவ் அப்படி சொன்னால் எங்க நாட்டில உதைப்பாங்கள். வீரமணி – தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று இங்கே கூறி வருகிறோம். ஆனால் எந்த தமிழனும் இதுவரை எம்மை உதைக்கவில்லையே? சேயின் மகள் - ??????

No comments:

Post a Comment