Monday, January 30, 2023

தமிழீழம் அமைய ஒருபோதும்

தமிழீழம் அமைய ஒருபோதும் இடமளியோம் என இந்திய அரசு 1983 முதல் உறுதியாக கூறிவருகிறது. ஆனால் இவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழீழம் அமைவது அவசியம் என்று டில்லி சென்று கூட்டம் போட்டு கூறுகிறார்கள். பரவாயில்லை. ஆனால் இவர்கள் 40 வருடமாக இந்தியாவில் அகதியாக இருப்பவர்களுக்கு குடியுரிழமை வழங்குமாறோ அல்லது சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறோ ஏன் கோருவதில்லை? மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட போதைப்பொருள் கடத்துவதாக கூறி அகதிகளை கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கிறது இந்திய அரசு. இவ்வாறு ஈழத் தமிழர் மீது பொய்யாக முத்திரை குத்துவதையாவது நிறுத்துமாறு இவர்கள் இந்திய அரசிடம் கோரலாமே?

No comments:

Post a Comment