Thursday, March 30, 2023

1983க்கு முன்னர் தலைமன்னாரில் இருந்த

1983க்கு முன்னர் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி தாயகம் திரும்பும் மலையக தமிழருக்கு அது பயன்பட்டது. இப்போது நீண்ட காலத்தின் பின்னர் காங்கேசன்துறை காரைக்கால் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இது பயன்பட வேண்டும். அவ்வாறு விரும்பும் அகதிகளுக்கு பயண செலவு உட்பட அவர்கள் மீள் குடியேற்றம் செய்வதற்குரிய உதவிகளையும் இந்திய அரசு வழங்க வேண்டும். இலங்கை இந்திய அரசுகள் என்ன நோக்கத்தில் விமான போக்குவரத்தை அடுத்து இந்த கப்பல் போக்குவரத்தையும் ஆரம்பிக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் இதனை பயன்படுத்தி தமக்கிடையே ஒரு நெருக்கமான ஜக்கியம் ஏற்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற தமிழ்த் தேசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

No comments:

Post a Comment