Thursday, March 30, 2023

ஒருபுறம் வடக்கு கிழக்கு பகுதிகள்

ஒருபுறம் வடக்கு கிழக்கு பகுதிகள் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறுகின்றார். மறுபுறம் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் உள்ள இந்து கோவிலையும் இந்து சாமி சிiலைகளையும் இடித்து உடைத்துவிட்டு புத்த விகாரை கட்டுகிறது. உலகில் எந்த மூலையில் இந்து கோவில் தாக்கப்பட்டாலும் கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இதுவரை சிங்கள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததில்லை. மாறாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து கடன் வழங்கி உதவி வருகிறது. அப்படியென்றால் தமிழின அழிப்பை சிங்கள அரசும் இந்திய அரசும் சேர்ந்து மேற்கொள்கின்றன என்றுதானே அர்த்தம். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் போன்றவர்கள் இது பற்றி என்ன கூறப்போகிறார்கள்? இந்திய அரசு உதவும் என்று நம்புவர்கள் இனியாவது இந்திய அரசை இனங் காணுவார்களா?

No comments:

Post a Comment