Saturday, April 29, 2023

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தினார் என்று அவர்கள்தான் எழுதுகிறார்கள். போர் நிறுத்தப்படவில்லை. அதற்கு பிறகுதான் 40ஆயிரம் அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நாம் கூறினால் உடனே “அகதி நாயே கலைஞரை ஊ - பாவிட்டால் உனக்கு தூக்கம் வராதா” என கேட்கிறார்கள் அப்புறம் அவர்களே கலைஞர் நான்கு நாட்களில் ஈழத் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்ததாக போஸ்டர் அடிக்கின்றனர் அதற்கு “கலைஞர் பெற்றுக்கொடுத்த விடுதலை எது? அது இப்ப எங்கே இருக்கு?” என நாம் கேட்டால் “அகதி நாயே இன்னொரு நாட்டு அரசியலை ஏன் பேசுகிறாய் உன் நாட்டு மகிந்தவை ஊ-பு” என்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை.ஈழத் தமிழரைக் கொன்ற திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் அந்த 32 அமைப்புகளிடம் என்ன இப்படி பேசுகிறார்களே என்று கேட்டால் “உஷ்! பாஜக உள்ளே வந்திடும்” என்கிறார்கள். என்ன கொடுமை இது?

No comments:

Post a Comment