Saturday, April 29, 2023

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை.

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை. இவர்கள் தீவிரவாதிகளும் இல்லை. ஆனாலும் இந்த 20 கூலி உழைப்பாளிகளும் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களை கொன்றவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டில் “நாம் அனைவரும் திராவிடர்கள்” என்று சொல்லி தமிழரை ஆளும் தெலுங்கர்கள் ஆந்திராவில் இத் தமிழரை திராவிடர்களாக பார்க்கவில்லையே? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? மாறாக, இந்த தமிழருக்காக குரல் கொடுப்பவர்களை “தமிழ் இனவெறியர்” என முத்திரை குத்துகின்றனர். என்னே கொடுமை இது? குறிப்பு - இன்று ஆந்திராவில் 20 கூலித் தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் ஆகும்.

No comments:

Post a Comment