Saturday, April 29, 2023

செய்தி – யாழ் குடத்தனை கடற்கரையில்

செய்தி – யாழ் குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் தோன்றியுள்ளது. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள். அப்படியென்றால் குடத்தனை கடற்கரையில் இருக்கமாட்டாரா என்ன? சரி. பரவாயில்லை. ஆனால் எனது கேள்வி என்னவென்றால் எங்கு சிவலிங்கங்கள் உடைக்கப்படுகின்றனவோ அங்கு ஏன் இந்த சிவலிங்கம் தோன்றுவதில்லை? அல்லது, எங்கு புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அங்கு ஏன் சிவலிங்கம் தோன்றுதில்லை? இதற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா என்ன கூறுவார்?

No comments:

Post a Comment