Saturday, April 29, 2023

தோழர் மாறன் ஏன் டிவி டவருக்கு குண்டு வைத்தார்?

• தோழர் மாறன் ஏன் டிவி டவருக்கு குண்டு வைத்தார்? அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்திற்கு சென்ற இந்திய ராணுவம் , பத்தாயிரத்திற்கு அதிகமான அப்பாவி தமிழ் மக்களை கொன்றது. 800ற்கு அதிகமான தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளை அழித்தது இத்தனை அராஜகத்தையும் செய்துவிட்டு அதனை மூடி மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்தன இந்திய அரசின் வானொலியும் தொலைக்காட்சியும். எனவேதான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தொலைக்காட்சி பெட்டியை உடைத்து தன் கண்டனத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் இந்திய அரசு தன் பொய்ப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அகிம்சை வழியில் தெரிவித்த எந்த குரலையும் அது செவிமடுக்கவில்லை. எனவேதான் இந்திய அரசின் செவிட்டு காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரத்துக் கத்த தோழர் மாறனும் அவருடைய தோழர்களும் முடிவு செய்தனர். உயிர் சேதமோ அல்லது பாரிய பொருட்சேதமோ ஏற்படுத்துவது என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. மாறாக இந்திய அரசுக்கும் முழு இந்திய மக்களுக்கும் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. இதே நோக்கம்தான் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசிய பகத் சிங்கிற்கும் இருந்தது. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரை பயங்கரவாதி என்றது. இந்திய மக்கள் அவரை தியாகி பகத்சிங் என்று அழைக்கின்றனர். அதேபோல் மாறன் மற்றும் அவரது தோழர்களை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றாலும் தமிழ் மக்கள் அவர்களை தியாகிகள் என்றே அழைப்பர்.

No comments:

Post a Comment