Tuesday, September 10, 2013

தோழர் தமிழரசனால் தகர்க்கப்பட்ட அரியலூர் மருதையாற்று பாலம்

• தோழர் தமிழரசனால் தகர்க்கப்பட்ட அரியலூர் மருதையாற்று பாலம்

இந்திய அரசு ஈழப் போராட்டத்தை நசுக்குவதை தோழர் தமிழரசன் அன்றே உணர்ந்து கொண்டார். எனவே தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி 1986ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார். “மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி!” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் முன்வைத்தார். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்து. தோழர் தமிழரசனின் தீர்க்கதரிசமான இந்த கோரிக்கை சரியானது என்பதை இந்திய அரசே தமிழ் மக்களின் அழிவிற்கு காரணம் என்ற செய்தி நிரூபிக்கின்றது.

இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக் கோட்டை எகஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏ.சி கம்பாட்மென்டில் இருந்த 35 பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பர பரப்பான செய்தியானது.

உண்மையில் அன்று நடந்தது என்னவென்றால் தோழர் தமிழரசன் தலைமையில் சென்ற தமிழ்நாடு விடுதலைப் படையினர் மருதையாற்று பாலத்தை குண்டுவைத்து தகர்த்துவிட்டு தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை அருகில் ஒட்டியிருந்தனர். பின்னர் அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று தாம் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து விட்டதையும் எனவே ரயில் சேவையை நிறுத்தும்படி எச்சரித்துவிட்டு சென்றனர்.

அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி உடனே சென்னை உட்பட பல தலைமையிடங்களுக்கு இந்த செய்தியை அனுப்பினார். ஆனால் பல தொலை பேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு வந்தது. இது அந்த அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த ரயில் டிரைவரிடம் “ஏதோ வெடி சத்தம் கேட்டது. மெதுவாக பார்த்து போகவும்” என்று எச்சரித்துள்ளார். சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் ரயில் பாலத்தில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். இல்லையேல் அதிகளவில் பலியாகியிருப்பர்.

பாலத்தில் குண்டு வெடித்து மூன்று மணி நெரம் கழத்து வந்த ரயில் கவிழ்து 35 பெர் பலியானார்கள். ஆனால் அடுத்தநாள் பத்திரிகைகளில் “ஓடும் ரயிலுக்கு குண்டுவைப்பு. பல அப்பாவி தமிழர்கள் பலி” என்று செய்தி வெளிவந்தது. மக்களுக்காக போராடியவர்கள் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர்.

தாங்கள் எச்சரித்தும் தங்கள் மீது கெட்ட பெயர் உருவாக்குவதற்காக அரசு வேண்டுமென்றே ரயிலை கவிழ்த்து மக்களைப் பலியாக்கியள்ளது என்பதை தோழர் தமிழரசன் உணர்ந்து கொண்டார். இந்த உண்மையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அவர் இறக்கும் வரை மட்டுமல்ல அவர் இறந்தபின்பும் கூட இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிவரவில்லை.

எந்த மக்களுக்காக தோழர் தமிழரசன் போராடினாரோ அந்த மக்களை குண்டு வைத்து கொன்றார் என்ற அவப் பெயருடனே அவர் மறைந்தார். ஆனால் மக்கள் என்றாவது ஒரு நாள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என நான் உறுதியாக நம்பகிறேன். அன்று தோழர் தமிழரசன் மீது படர்ந்த அவப் பெயர் நீங்கும். அவர் மக்களின் போராளி என்பது வெளிப்பட்டு மக்கள் மனங்களில் நிறைந்து காணப்படுவார்.

மீண்டும் குண்டுகள் வெடிக்கும்.
எதிரி தூக்கியெறிப்படுவான்.
தோழர் தமிழரசன் கனவுகள் நிறைவேறும்.

No comments:

Post a Comment