Tuesday, September 10, 2013

சுவாமி ஆஸ்ரம்பாபு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

 சுவாமி பிரேமானந்தா
• சுவாமி நித்தியானந்தா
• சுவாமி சங்கராச்சாரியார் ஆகியோர் வரிசையில் இன்று
• சுவாமி ஆஸ்ரம்பாபு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மதிப்பு மிக்க சாமியார்களில் ஒருவரான 72 வயதான ஆஸ்ரம்பாபு சாமியார் 11வயது சிறுமியுடன் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சாமியார்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் மக்கள் மனங்களில் இன்னும் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் அறியாமைகளை பயன்படுத்தும் இந்த சாமியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த சுவாமி நித்தியானந்தா இன்றும் புகழ் மிக்க சாமியாராக டிவி யில் வலம் வருகிறார். அவரது பாலியல் காட்சிகள் யு ரியுப்பில் அதிகளவு பார்க்கப்பட்டது என்ற சாதனையைப் பெற்றுள்ளது. நடிகை சொர்ணமாலாவுடன் இருந்த காஞ்சி பெரியவர் இப்பவும் புகழுடன் வலம் வருகிறார். இவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது பல (ஆ)சாமிகளுக்கு தொடர்ந்தும் தவறு செய்யும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.

மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே, மக்கள் பகுத்தறிவு பெற்றால் மட்டுமே, மக்கள் மூட நம்பிக்கைகளை ஒதுக்கினால் மட்டுமே சமூகம் முன்னேற முடியும். இவ்வாறான சமூக விரோதிகளை ஒழிக்க முடியும். டில்லியில் ஒரு 16 வயது பையன் மாணவியைக் கற்பழித்துவிட்டான் என்றதும் கொதித்தெழுந்து அவனது ஆணுறுப்பை வெட்டி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கொக்கரித்தவர்கள் இன்று ஒரு கிழட்டு சாமி 11 வயது சிறுமையை கெடுத்திருப்பது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? அந்த கிழட்டு ஆசாமியை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று ஏன் கோரவில்லை?

ஒரு புறத்தில் இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்கிறார்கள். இன்னொரு புறத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி சாமிகள் என்னும் போர்வையில் சமூக விரோதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நிலையில் ஒரு பெரியார் அல்ல ஆயிரம் பெரியார் தோன்றினாலும் இந்தியாவில் பகுத்தறிவு வளருமா என்பது சந்தேகமே!

No comments:

Post a Comment