Saturday, September 28, 2013

• ஜே.வி.பியும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள். அவற்றால் தமிழ்மக்களுக்கு எந்த பயனும் இல்லை - முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர் ரஞ்சித் தெரிவிப்பு

• ஜே.வி.பியும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள். அவற்றால் தமிழ்மக்களுக்கு எந்த பயனும் இல்லை - முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர் ரஞ்சித் தெரிவிப்பு

கடந்த ஞாயிறு (15.09.2013) யன்று லண்டன் ஈஸ்ட்காமில் தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் உரையாடல் அரங்கு இடம்பெற்றது. காலை 11.30 முதல் மாலை 6.30வரை நடைபெற்றது.

அமர்வு-1 ஆக The Time That Remains என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

அமர்வு-2 ஆக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் சபேசன் தலைமையில் நடைபெற்றது. சஜீவன் One Hundred years of solitude என்ற மொழிபெயர்பு நாவல் பற்றி தன் கருத்துகளை பகிர்ந்தார். புத்தகத்தை படிக்காமல் அதையும் மேடையில் வெளிப்படையாக பெருமையாக சொல்லி ஆய்வு செய்யும் இன்றைய சில பேச்சாளர்கள் மத்தியில் சஜீவன் தமிழ் புத்தகத்தையும் மட்டுமன்றி ஆங்கில பிரதியையும் முழுமையாக படித்து ஒப்பிட்டு சிறந்த கருத்துகளை வழங்கினார். அவருடைய கருத்துரை அந்த புத்தகத்தை ஒருமுறை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது. அவர் உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

அமர்வு-3 ஆக பேராசிரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் “மாகாணசபை தேர்தல்” பற்றி தனது கருத்துகளை பகிர்ந்தார். அடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த போஸ் தேர்தலில் தமக்கு(கூட்டமைப்புக்கு) வாக்களிக்குமாறு கோரினார். அதன்பின்பு இலங்கையின் சமகால அரசியல் நிலை பற்றி காதர் உரையாற்றினார். இறுதியாக ஜெர்மனியில் இருந்து வந்த ரஞ்சித் இலங்கையின் சமகால அரசியல் பற்றி உரையாற்றினார்.

ரஞ்தித் லொக்பிலர் சிங்கள இனத்தை சேர்ந்தவர். முன்னர் ஜே.வி.பியில் செயற்பட்டவர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக தலைமையுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து ஒதுங்கியவர். கடந்த 30 ஆண்டுகளாக ஜெர்மனியில் மனித உரிமைச் செயற்பாட்டாளராக செயற்படுகிறார்.

ரஞ்சித் அவர்களிடம் தற்போதைய ஜே.வி.பி யும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி பற்றியும் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, இரண்டுமே சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள்தான். முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் குணரட்ணம் ஒரு தமிழராக இருந்தாலும் அவரும் அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார். எனவே இவற்றால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார். இறுதியாக அவர் இந்தியா அமெரிக்கா என யார் வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவின்றி யாராலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இதை தமிழர்கள் உணர்ந்து சிங்கள மக்களுடன் முதலில் பேச வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment